Translate

Sunday 10 June 2012

இலங்கை முழுவதும் புத்தவிகாரைகளை கட்டி எழுப்பவதை எவரும் தடுக்க முடியாது- கோத்தா

இலங்கை முழுவதும் புத்தவிகாரைகளை கட்டி எழுப்புவதை எவரும் தடுக்க முடியாது என்றும் குறிப்பாக வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் புத்தவிகாரைகளை புனரமைத்து வருகின்றனர் என்றும் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராசபக்ச நேற்று மாத்தறை, வெஹரஹேன விகாரையில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள பௌத்த விகாரைகளைக் கட்டி எழுப்பும் அரசின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்தச் செயற்பாடுகள் எந்தவித தடைகளுமின்றி மேற்கொள்ளப்படும், தடைகளைச் சவாலாக ஏற்று விகாரைகளைக் கட்டியெழுப்புவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களால் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் உள்ள கிராமங்களில் அதிக அளவில் பௌத்த விகாரைகளைத் தரிசிக்க முடியாத நிலைமை இருந்தது. இந்த நிலை இராணுவத்தினரின் முயற்சியினால் மாற்றப்பட்டது. இப்போது அவற்றை நாங்கள் மரபுரிமையுடன் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எவராலும் தடுக்க முடியாது. தற்போது அவை புனரமைக்கப்பட்டு வருகின்றன.

அதற்காக ஏற்படும் எந்தவிதமான சவால்களையும் நாம் எதிர்கொள்வோம். குறிப்பாகப் பௌத்தன் என்ற முறையில் விகாரைகளைக் கட்டியெழுப்புவதற்கான சகல நடவடிக்கைகளையும் என்னால் மேற்கொள்ள முடியும். அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இதன் மூலம் எமது மரபுரிமைகளை நாங்கள் பாதுகாக்க முடியும் என கோத்தா தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment