Translate

Wednesday 18 July 2012

போர்க்குற்றவாளி சமரசிங்கவை அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியேற்றுமாறு கிறீன் கட்சி கோரிக்கை

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிறிலங்கா தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்கவை அவுஸ்ரேலியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கிறீன் கட்சியின் செனட் சபை உறுப்பினர் லீ றியானொன் கோரிக்கை விடுத்துள்ளார்.

2009இல் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, நாட்டை விட்டு வெளியேற முயன்ற அகதிகளை தடுத்ததாக அட்மிரல் திசார சமரசிங்க பெருமையாகப் பேசியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது தலைக்கு மேலே போர்க்குற்றச்சாட்டுகள் தொங்குவதாக செனட் உறுப்பினர் றியனொன் தெரிவித்துள்ளார்.


ஆனால், அட்மிரல் சமரசிங்கவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை தாம் நான்கு மாதங்களுக்கு முன்னரே தள்ளுபடி செய்து விட்டதாக அவுஸ்ரேலிய சமஸ்டி காவல்துறை உறுதி செய்துள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் திசார சமரசிங்க அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராக சிறிலங்காவினால் நியமிக்கப்பட்டபோது, அவுஸ்ரேலிய வெளிவிவகாரத் திணைக்களம் அதை சிக்கலுக்குரியதாக பார்த்தது.

அவர் போரின் இறுதிக்காலத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதியாகப் பணியாற்றியிருந்தார்.
இதற்கிடையே, சமர்ப்பிக்கப்பட்ட தகவல் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், அட்மிரல் திசார சமரசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படாது என்றும் சமஸ்டி காவல்துறை பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 3ம் நாள் இந்த முடிவு அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவுக்கு கூறப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://thaaitamil.co...்றவாளி-சமரசிங்/ 

No comments:

Post a Comment