
மும்பை ஜுஹூ பீச் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து எளிதாக தப்பியதும் அஸ்ஸாமிய பெண்ணின் மீது வன்மம் காட்டிய மிருங்கங்களுக்கு ஒரு சாக்காக (என்ன செய்யபோகிறார்கள் பிடிப்பார்கள் பிறகு விட்டுவிடுவார்கள்) என நினைப்பாக இருக்கலாம் ,
ஆனால் இந்த விடயத்திலும் கர்நாடகமாநிலத்தை சேர்ந்த ஒரு மத இயக்கம், பெண் 10 மணிக்கு பாருக்கு ஏன் சென்றால் அவளுக்கு அங்கு என்ன வேலை பாரதிய நாரி கலாச்சாரம் என்று ஸ்டேட்மெண்ட் விட்டு இது போன்று செயல்படும் பலருக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாகும் இனிமேல் பெண்கள் கலாச்சார பிரஜையாக நடக்கவேண்டும் என்று பழைய நீதியை பேசிக்கொண்டு இருப்பது ஒரு வழியாக இதுபோன்ற குற்றம் செய்பவர்களுக்கு மேலும் தெம்பு தரும் நச்சு பாணமாக அமையும் சமூகத்தில் எந்த ஒரு செயலுக்கு பெண்ணை குறைகூறுவது தொன்று தொட்டு நடந்து வருகிறது
அம்பேத்கார் பெரியார் ஆகியோரின் கூற்றுப்படி பெண்களின் முன்னேற்றம் ஒரு நாட்டின் முன்னேற்றம் ஆனால் இது போன்ற மிருகத்தனமான செயல்களை செய்து விட்டு செய்பவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களும் தேசத்திற்கு நாசம் விளைவிக்கும் காரணிகளே,
அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்கும் அந்த குற்றவாளிகள் தண்டனைக்கு உட்படுத்தபடுவார்கள் என்று நம்பிக்கை கொள்வோமாக
—
No comments:
Post a Comment