Translate

Friday 10 August 2012

டேட்டிங் போறீங்களா? இதை கவனமா படியுங்க...


டேட்டிங் போறீங்களா? இதை கவனமா படியுங்க...

டேட்டிங் போறீங்களா? இதை கவனமா படியுங்க...


இன்றைய காலத்தில் காதல் செய்தால்
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதற்கு டேட்டிங் செல்கின்றனர். மேலும் காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள். அது உண்மையிலேயே சரி தான். அத்தகைய காதல் எங்குஎப்போது வரும் என்று சொல்ல முடியாது. 

மேலும் அந்த காதல் ஜாதிமதம்மொழிநிறம் என்று எதுவும் பார்க்காமல் வரும். இத்தகைய காதல் அந்த காலத்தில் வருகிறதென்றால்அது பெரிய விஷயம். ஆனால் இப்போது வருகிறதென்றால்அது சாதாரணமான விஷயமாகிவிட்டது. மேலும் அந்த காதலில் டேட்டிங் என்பதும் சகஜமாகிவிட்டது. இவ்வாறு டேட்டிங் செல்லும் போதுஅந்த காதல் நீண்ட நாட்கள் சந்தோஷமாக நிலைத்திருக்க எவ்வாறு நடக்க வேண்டும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்...

காதல் செய்யும் இருவரும் ஒரே மொழியாக இருந்தால் மிகவும் ஈஸி. ஆனால் அதுவே வேறு மொழியாக கொஞ்சம் கஷ்டம் தான். ஆகவே அப்போது நம் துணைவருடன் நல்ல தெளிவான,இருவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் ஒரு மொழியை தேர்ந்தெடுத்துபேச வேண்டும். ஏனெனில் அப்போது தான் இருவரும் நல்ல முறையில் புரிந்து கொள்ள முடியும். சொல்லப்போனால்,அந்த நேரத்தில் ஆங்கிலம் அல்லது வேறு ஏதாவது ஒரு மொழி தான் நன்கு உதவும்.

இது மிகவும் முக்கியமான ஒரு டிப்ஸ். இப்போது காதலிக்கும் இருவரும் ஒரே ஊரிலோ அல்லது நாட்டிலோ இல்லாமல் இருந்தால்அப்போது அவர்களுடன் இன்டர்நெட் மூலம் ரொமான்ஸ் செய்வீர்கள். அவ்வாறு செய்யும் போதுஉங்கள் துணையை மனதளவில் காதலால் நிரப்ப வேண்டும். இவ்வாறு செய்தால் உடலளவில் தூரம் இருந்தாலும் எந்த பிரச்சனையும் இருக்காது.

நீங்கள் காதலிப்பவர்கள் என்ன கலாசாரத்தை உடையவர்களோகாதலித்தால் அதனையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். உதாரணமாக நீங்கள் வெளிநாட்டவரை காதலிக்கின்றீர்கள் என்றால் அவர்கள் கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டிருக்கும். ஆகவே அப்போது அதனை தவறாக எண்ணாமல்அதனை மதித்து நடக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல்அப்போது அவர்களுக்கு உங்கள் வீட்டு கலாசாரத்தையும் கொஞ்சம் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கும் அந்த பழக்கம் தெரிந்து நடப்பார்கள்.

காதலிப்பவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மரியாதையுடன் நடத்த வேண்டும். என்ன தான் நீங்கள் பெரியவர்களாக இருந்தாலும்காதலிக்கும் இருவரும் அவரவர்களது நாட்டையும்கலாச்சாரத்தையும்ஊரையும் மதித்து நடக்க வேண்டும். இவ்வாறு நடந்தால்இருவருக்கும் மற்றவர்களைப் பற்றி ஒரு நல்ல எண்ணமும்,அவர்களது கலாச்சாரம் மற்றும் ஊரின் மீது ஒரு பக்தியும் இருக்கும். ஏனெனில் நீங்கள் அந்த ஊரின்நாட்டின் மகனாக போகப் போகிறீர்கள் அல்லவா!!!

இதுவரை நீங்கள் சுவையான நன்கு காரசாரமான உணவுகளை சாப்பிட்டிருப்பீர்கள்,இப்போது கொஞ்சம் அனுசரித்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும். மேலும் அந்த அனுசரிப்பும் சிறிது நாட்களில் விருப்பமாகவும் மாறும். உதாரணமாக,இப்போது உங்கள் துணைக்கு வட இந்திய உணவுகள் பிடிக்கும் என்றால்அதையும் சாப்பிட்டு பாருங்கள். இதனால் வேறு என்ன பேசுவது என்று யோசித்த இருவருக்கும்,ஆலோசிக்க ஒரு நல்ல தலைப்பு கிடைக்கும்.

ஆகவே இவ்வாறெல்லாம் நடந்து கொண்டால்உங்கள் வாழ்க்கை நன்கு சந்தோஷமாக போவதோடுவாழ்க்கை ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர் அனுபவசாலிக

ள்

No comments:

Post a Comment