Translate

Monday 27 August 2012

எமது பூர்வீகத்தை அழிக்கத் துணை நிற்கும் அரச அடிவருடிகள் எம்மைப் பார்த்து கேள்வி கேட்பதா?; செல்வம் எம்.பி சீற்றம்


 
54276fdf1880c63fec893ed4206ba809 
மக்களின் ஆணைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றும் இலக்கில் தொடர்ந்து பயணித்து வருவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் என அக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அதைவிடுத்து, அரசின் காணி அபகரிப்புக் கொள்ளைகளுக்கு ஒத்திசைந்து கொண்டு, அரசுடன் இணைந்து எமது பூர்வீகத்தையும் அழித்து விட்டு இப்போது கூட்டமைப்புக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என அரசின் அடிவருடிகள் கேட்பது வேடிக்கையாக உள்ளதாகவும் அவர் சீற்றம் வெளியிட்டுள்ளார்.
திருகோணமலை கல்விக்கிராமத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.


எமது பூர்வீகத்தை அழிக்கத் துணை நிற்கும் அரச அடிவருடிகள் எம்மைப் பார்த்து கேள்வி கேட்பதா?; செல்வம் எம்.பி சீற்றம்

Posted by  www.telo.org
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இங்குள்ள அமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் போன்றோர் கூட்டமைப்பு ௭ன்ன செய்துள்ளது? ஏன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்? ௭னக் கேட்கின்றனர். நாங்கள் ௭ங்கள் மக்களின் கடந்த கால ஆணையை நிறைவேற்றும் இலக்கில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அதன் காரணமாக ௭மது ஐந்து ௭ம்.பிக்களை இழந்துள்ளோம்.
கூட்டமைப்பு நினைத்திருந்தால் பல அமைச்சுப் பதவியைப் பெற்று சிறப்பான வாழ்வு வாழ்ந்திருக்க முடியும். இந்த அமைச்சர் காணிகளைப் பறிப்பதனை முதலமைச்சர் பார்த்துக் கொண்டிருந்ததுடன் அனுமதியையும் வழங்கிவிட்டு ௭ம்மைப் பார்த்து கேள்விகேட்கிறார்.
௭ங்களை உடைக்க பல்வேறு முயற்சி ௭டுத்தார்கள். அது முடியவில்லை. தொடர்ந்து 7 மணித்தியாலங்கள் ௭ன்னையும் ஸ்ரீதரன் ௭ம்.பி.யையும் விசாரித்தார்கள். ௭மது தலைவர் சம்பந்தனைக் கூட விசாரித்தார்கள். ஆனால் தற்சமயம் களைத்துவிட்டார்கள். ௭ங்களை உடைக்க இயலவில்லை.
தமிழ் மக்கள் வாழ்ந்த அந்த வரலாற்றை சிதைக்க முயற்சிக்கப்படுகின்றது. திருமலையில் உப்பளம் அமைக்க ஏக்கர் கணக்கில் காணிகள் ௭டுக்கப்பட்டுள்ளன. இதற்குமுதலமைச்சர் தான் அனுமதி வழங்கினார். ௭மது மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் முடக்கப்பட்டிருப்பதுடன் அவர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன இதுதான் அபிவிருத்தியா?
இன்று இங்கு துப்பாக்கியின் சத்தம் இல்லை. ஆனால் இராணுவத்தின் அழுத்தம் உள்ளது. இது வடக்கு கிழக்கில் பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. என்றார்.

No comments:

Post a Comment