Translate

Thursday 9 August 2012

தொடர்கின்றது மனிதநேயனின் இலட்சிய பயணம்


சிறப்புக் காணொளி

  

தொடர்கின்றது மனிதநேயனின் இலட்சிய பயணம்

ஐந்து அம்சக்கொரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 22ஆம் நாள் மனிதநேயன் திரு கோபி சிவந்தன் அவர்களால் தொடங்கபட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் பதினாலாம்  நாளாக தளராத மனதோடு தொடர்கின்றது.
இன்று மிகவும் சோர்ந்த நிலையில் காணப்பட்ட சிவந்தன் அவர்கள் கதைக்க கூட இயலாமல் மிகவும் அவதிப்பட்டார், ஆயினும் தன் இலட்சிய பயணத்தில் உறுதியாய் உள்ளதாக எம்மிடம் கூறியுள்ளார். பன்னாட்டு மக்கள் சிவந்தனை பார்வையிட்டு அவரின் போராட்டத்தை பற்றி கேட்டு செற்றனர்.
இளையவர்கள் மற்றும் சிறுவர்கள் பலரும்  சிவந்தனின் உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்னரும்  அருகாமையிலும் நின்று நூற்றுக்கணக்கான துண்டு பிரசுரம் கொடுத்தும் சிவந்தனின் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் தெரியபடுத்தினார்.
மனிதநேயன் திரு. கோபி சிவந்தன் அனைத்து தமிழீழ மக்களுக்காக நீதி வேண்டி  தன்னை தானே வருத்திக்கொண்டு உணவு தவிர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார்  அவருக்கு தோளோடு தோள் நிற்று அவரின் இலட்சிய பயணத்தில் நாமும் பயனிப்போமாக.
http://www.pathivu.com/news/21587/57//d,article_full.aspx

No comments:

Post a Comment