Translate

Monday 26 November 2012

தமிழர் பிரச்சனைக்கான தீர்வு; ஒபாமாவின் புதிய நிர்வாகத்தில் விசேட குழு! - விவகாரம் சூடு பிடிக்கலாம்..!

News Service
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் போது இலங்கை விவகாரங்களை கையாள்வதற்கான விசேட அரச உயர்மட்டக் குழு ஒன்று தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வரை காலமும் இலங்கை விவகாரங்களை ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜதந்திரிகளே கையாண்டு வந்த போதிலும் ஜனாதிபதி ஒபாமாவின் புதிய நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களமே நேரடியாக இலங்கை விவகாரங்களை கையாளவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஜனவரியில் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யும் போது இராஜாங்கத்திணைக்களத்தின் உயர் மட்டப் பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ள வேளையில் ஆசிய விவகாரங்களை கையாள்வதில் அனுபவமுடையவர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே சமயம், அமெரிக்க அரசின் புதிய மாற்றங்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை அரசும் இராஜாந்திர ரீதியில் காய்களை நகர்த்தி வருவதாக அறிய முடிகிறது.
தமிழர் பிரச்சனைக்கான தீர்வில் அமெரிக்க அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பு கொண்டு அக்கறையாகச் செயற்பட இலங்கை அரசு தான் காரணம். அதற்காக இலங்கை அரசுக்கு தாம் நன்றி சொல்ல வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழர் பிரச்சினைத் தீர்வில் அமெரிக்கா எமக்கு ஆதரவாக செயற்படும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும், அரசின் ஏமாற்றுப் போக்கை இன்று உலக நாடுகள் உணர்ந்துள்ளன எனவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment