Translate

Sunday 22 May 2011

சோனியாகாந்தியை சந்திக்க மாட்டேன்: கருணாநிதி

கனிமொழி கைது, பிரதமர் விருந்து என பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதி நாளை புதுடெல்லி செல்லவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இந்தத் தகவலைக் கூறினார். பிரதமர் அளிக்கும் விருந்தில் தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொள்வார் என்றும், தான் நாளை புதுடெல்லி செல்லவுள்ளதாகவும் கூறினார்.

அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியாவை நீங்கள் சந்தித்துப் பேசுவீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் இப்போது சோனியாவை சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்றார்.
நாளை கனிமொழி சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் புதுடெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிற

No comments:

Post a Comment