Translate

Saturday 28 May 2011

தமிழனைக் கொன்று கடைசியில் தமிழையே கொல்லும் பரதேசிப் பாதுகாப்பு அமைச்சு!

முள்ளிவாய்காலில் நச்சுக் குண்டுகளை வீசி தமிழ் மக்களை கொத்தோடு கொத்தாக ஆயிரக்கணக்கில் கொன்றொளித்த இலங்கை இராணுவம் கடைசியில் அவர்களால் உயிராகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மொழி மீதே கை வைத்துள்ளது.. 

தமிழர்களைக் கொன்று விட்டோம் என்ற இறுமாப்பில் தமிழ் மொழியையும் கொல்லும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள் இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சு என்று தங்களைக் தாங்களே கூறிக் கொள்ளும் அடி முட்டாள்கள். 

தமிழனைக் கொன்றவர்கள் தமிழைக் கொல்வது ஒன்றும் முதன் முறையல்ல.. புலம்பெயர் தேசங்களிலிருந்து தங்கள் சொந்தங்களைப் பார்க்க வடக்குக்கு செல்லும் எமது உறவுகளுக்கு விசேட அனுமதி தொடர்பான நிபந்தனை விதித்து, வடக்கை தாங்களே இன்னொரு தேசமாக உத்தியோகப்பற்றற்ற முறையில் அறிவித்தது போல அதனுள் நுழைவதற்க்கான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. ................ read more

No comments:

Post a Comment