Translate

Friday 24 June 2011

கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடாத்திய அளவெட்டி கூட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று நண்பகல் 12 மணியளிவல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. யாழ் அளவெட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சந்திப்பின் போது பலவந்தமாக அங்கு சென்ற இராணுவத்தினர் அவர்களைத் தாக்கியுள்ளதுடன் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெற்கில் இருக்கும் ஜனநாயகத்தை விரும்பும் கட்சிகள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டன.

No comments:

Post a Comment