Translate

Monday 10 October 2011

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனை பாராட்டி கௌரவிப்பு _

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனை பாராட்டி கௌரவிப்பு _



  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினால் கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டமையைப் பாராட்டி, தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய பரிபாலனசபைத் தலைவரும் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனை பாராட்டும் நிகழ்வு இன்று தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் சபையின் உப தலைவர் சி.அருளானந்தம் தலைமையில் இடம்பெற்றது. 


ஆலய முன்றலில் இருந்து துர்க்க இல்லாச் சிறார்களின் வரவேற்புடன் பல்கலைக்கழக பேராசிரியாகள் விரிவுரையாளர்கள் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் விரும்பிகள் இந்து மதக் குருமார்கள் அன்னையர்கள் உட்பட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து வரவேற்புரையை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் விநாயகரத்தினம் நிகழ்த்தினார்.

ஆசியுரைகளை கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதம குரு மகாராஜஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் மாவை ஆதீன பிரதம குரு மகாராஜஸ்ரீ இரத்தினசபாபதி குருக்கள் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ அகிலேஸ்வரக் குருக்கள் நீர்வேலியைச்சேர்ந்த சிவஸ்ரீ சந்திரசேகரக் குருக்கள் செந்தில்ராஜக் குருக்கள் மருதனார்மடம் ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சுந்தரேஸ்வரக் குருக்கள் உட்பட மற்றும் பலர் ஆசியுரை வழங்கினார்கள். _

No comments:

Post a Comment