Translate

Tuesday 17 January 2012

பள்ளிக் காதலால் கர்ப்பம் தரித்த 14 வயது சிறுமிகள்

திருகோணமலை - உப்புவெலி பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் தனது காதலனால் கற்பழிக்கப்பட்டுள்ளதாக உப்புவெலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கர்ப்பம் தரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்துள்ள உப்புவெலி பொலிஸார் அவரை இன்று (12) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர். 

இதேவேளை, நிட்டம்புவ பிரதேசத்தில் 15 வயதுடைய காதலன் (சிறுவன்) தனது 14 வயதுடைய காதலியை (சிறுமியை) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். 


சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (12) அத்தனகல நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

No comments:

Post a Comment