Translate

Thursday 12 January 2012

மண்டைதீவில் 200ஏக்கரில் கடற்படை முகாம்- ஆலயமும் பறிபோகிறது!

யாழ்.மண்டதீவில் பொது மக்களது 200 ஏக்கர் விவசாய நிலங்களை கையக்கப்படுத்தி பாரிய கடற்படை முகாம் அமைக்கப்படுகின்றது. தற்போது இதற்கான பாதை அமைப்பு பணிகள் துர்pதமாக நடைபெற்று வருகின்றதை காண முடிகின்றது.

மண்டதீவு அம்மன் ஆலயம் மற்றும் தீர்த்தக்கேணியை உள்ளடக்கிய 200 ஏக்கர் நிலப்பரப்பிலேயே இம் முகாம் அமைக்கப்படுகின்றது.  அப்பகுதியிலுள்ள சாத்தவாரி கடற்படை முகாமுடன் சேர்ந்ததாக இம்முகாமையும் இணைத்து பாரிய கடற்படை தளம் ஒன்றை அமைப்பதே இதன் நோக்கம் என பொது மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இக்காணிகளுக்கு சொந்தக்காரரான பொது மக்கள் செய்வதறியாத நிலையில் திகைத்து போயுள்ளனர்.

No comments:

Post a Comment