Translate

Friday 17 February 2012

யாழில் தலைவிரித்தாடும் தமிழ்க் கொலைகள்: புகைப்படம் இணைப்பு !


யாழில் தலை விரித்தாடும் தமிழ்க் கொலைகள் தமிழையே தாய்மொழியாக கொண்ட யாழ்.குடாவில் தமிழ் எழுத்துப் பிழையுடன் தலைநிமிர்ந்து நிற்கும் நிலாவரைக் கிணற்று வழிகாட்டிப் பெயர்ப்பலகை. யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழர் பிரதேசங்களிலும் தற்போது தாய்மொழி கொலை செய்யப்பட்டு வருகின்றமை வேதனைக்குரிய விடமாகும். யாழ் நிலாவரைக் கிணற்றுப் பிரதேசத்திற்கு செல்வதற்கான வழிகாட்டிப் பலகையில் தமிழ் கொலை எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதைப் பாருங்கள்.


பெரும்பான்மையின மக்கள் பரந்து வாழும் பிரதேசங்களில் தமிழ் கொலை ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்று வருகின்றது. அதே போல தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களும் இவ்வாறான பிழைகள் தற்போது அதிகளவில் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது.யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வருபவர்கள் யாராக இருந்தாலும் இங்கு செல்லத்தவறுவதில்லை. எனினும் இப் பெயர்ப்பலகை பிரபல காப்புறுதி நிறுவனத்தின் ஆதரவில் நிறுவப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது வேண்டும் என்று நடைபெறுகிறதா இல்லை தற்செயலாக இடம்பெறுகிறதா என்பது தான் தெரியவில்லை !


No comments:

Post a Comment