Translate

Sunday, 5 February 2012

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி நாளை இலங்கைக்கு விஜயம்


இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோருடன் சுப்ரமணியம் சுவாமி பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மக்களுக்கு தனியான நிர்வாக அலகு அவசியம் என கடந்த காலங்களில் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்திருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளுக்கு முன்னதாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதனால் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எனினும், அவரின் இலங்கை விஜயத்திற்கான சரியான நோக்கம் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment