Translate

Friday 24 February 2012

ஆயுதப் போராட்டம் – சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்தவர்கள் உங்கள் முன் ஒன்றாக


வவுனியா நகரசபை மண்டபத்தில் கடந்த 18ஆம் திகதி அன்று தம்pழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து முதன்முறையாக ஒரு மக்கள் சந்திப்பை நடத்தினர். கூட்டத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன்,வினோநோகராதலிங்கம், மாவை. சேனாதிராஜா,.சரவணபவன், எம்.எ.சுமந்திரன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.; இந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போதே த.சித்தார்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவரது உரையின் முழு விபரம் வருமாறு:
ஒற்றுமையைப் பற்றிப் பேசப்படுகின்ற இந்தக் காலக்கட்டத்தில் கடந்த காலத்தையும் மீட்டிப்பார்ப்பது நல்லதென்று நான் நினைக்கின்றேன். தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் 1972இல் மூன்று கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது. அந்த மூன்று கட்சிகளும் மிதவாதக் கட்சிகள் என்றும் சொல்லலாம் அல்லது ஆயுதப்போராட்டத்தில் இல்லாமல் சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர்களாக இருக்கலாம். அந்தக் கூட்டணியில் தமிழரசுக் கட்சிஇ தமிழ்க் காங்கிரஸ் கட்சிஇ ஐயா தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற கட்சிகள் இடம் பெற்றன. அப்போதுகூட மக்கள் அந்தக் கூட்டமைப்பிற்கு அமோக ஆதரவினை வழங்கியிருந்தார்கள்.
பின்னர் இளைஞர்கள் மத்தியில் தோன்றிய ஒரு எழுச்சியானது இந்த சாத்வீகப் போரட்டத்தால் எங்களது விடுதலையைப் பெற்றுவிட முடியாது என்ற காரணத்தினால் அன்றிருந்த இளைஞர்கள் அவர்கள் பிரபாகரனாக இருக்கலாம், சிறிசபாரத்தினமாக இருக்கலாம் எனது தலைவர் உமாமகேஸ்வரனாக இருக்கலாம் அல்லது பத்மநாபாவாக இருக்கலாம் இவர்கள் களமிறங்கி ஆயுதப் போராட்டத்திற்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள். 1984-85இல் நான்கு இயக்கங்கள் ஒற்றுமையாக ஈழத் தேசிய விடுதலை முன்னணியை ஆரம்பித்தார்கள். ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்த நான்கு இயக்கங்கள் அங்கு ஒற்றுமையாக இருந்தன. இன்று ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்தவர்களும், சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்தவர்களும் ஒன்றாக உங்கள் முன்னால் நிற்கின்றோம்.
ஆயுதப் போராட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்று ஒரு விடயத்தைக் ;கருதிக்கொண்டிருக்கிறார்கள். அது செல்வமாக இருக்கலாம் அல்லது சுரேஷ் பிரேமச்சந்திரனாக இருக்கலாம். அல்லது சிவசக்தி ஆனந்தனாக இருக்கலாம். வினோவாகா இருக்கலாம் ஏன் நானாகக்கூட இருக்கலாம். ஆயுதப் போராட்டத்தில் எங்களை இணைத்துக் கொண்டபோது எந்தச் சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தில் அமர்வோம் என்றோ தேர்தலில் நிற்போம் என்றோ கனவிலும் நினைக்கவில்லை. செல்வம் போன்றவர்கள் அப்பொழுது க.பொ.த.சாதாரண தரத்தில் படித்துக்கொண்டிருந்திருப்பார் என்று நான் நினைக்கின்றேன்.. தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது கல்வியைக் கைவிட்டுஇ தங்களை முழுமையாக அர்ப்பணிப்பதற்குத் தயாராக ஆயுதப் போராட்டத்தில் தங்களை இணைத்துக.;கொண்டார்கள். சேனாதி அண்ணன் 1960களிலேயே கல்வியைத் துறந்து மிகமிக இளைஞனாக கல்வியைத் துறந்து இந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். அவரை நாம் மிதவாதி என்றும் எடுக்க இயலாது ஆயுதப்போராளி என்றும் எடுக்க இயலாது. அவர் இரண்;டு பக்கத்திற்கும் சேர்ந்தவர்.
அதைப் போன்றே சங்கரி அண்ணன் அவர்கள் ஏறக்குறைய நாற்பது ஐம்பது ஆண்டுகளாக தமிழ் மக்களின் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். சம்பந்தர் அண்ணன் 1961 சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு மறியலுக்குச் சென்றவர். கோமகாவில் தடுப்புக்காவலில் இருந்தவர்கள். ஆகவே அவர்;களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் ஆயுதப் போராட்டத்திற்கு வந்தவர்கள் தங்கள் உயிரைக் கொடுப்பதகற்குத் தயாராகவே வந்தார்கள். அவர்களும் சமாதானப் பாதையிலே சாதவீகப் போராட்டங்களிலே தந்தை செல்வாஇ ஜிஜி பொன்னம்பலம் ஆகியோரின் அடியொற்றி; சாதவீகமான முறையில் போராட்டங்களை நடத்திஇ பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையைத் தீரக்கலாம் என்று வந்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் இங்கு ஒன்றாகக் கூடியிருக்கின்றோம். ஆனந்தன் கூறியதைப்போன்று நான் இங்கு மீண்டும் கூறுகின்றேன் ‘நாங்கள் ஒன்றுபட்டிருக்கின்றோம். மக்களாகிய நீங்களும் ஒன்று பட்டிருக்கின்றீர்கள். இந்த ஐக்கியம் மேலும் வலுப்பெற வேண்டும். நாங்கள் மாத்திரமல்ல எம்மை ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளியில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஆயுதப்பலத்தை முற்றுமுழுதாக இழந்துவிட்ட எமக்கு எமது ஒற்றுமைதான் சிறந்த பலமாகும். இதனை நாம் கட்டிக்காக்க வேண்டும் என்று கூறினார். இந்தக் கூட்டத்தில் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றினர்.

No comments:

Post a Comment