Translate

Friday 24 February 2012

மனோ கணேசன் நாளை சனிக்கிழமை நீர்கொழும்பில் உரை

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் நாளை சனிக்கிழமை 25 ம் திகதி  நீர்கொழும்பில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கை ஆகியவை தொடர்பில் உரையாற்றவுள்ளார்.
சுதந்திரத்திற்கான அரங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு  பிற்பகல் 3.30 மணிக்கு நீர்கொழும்பு சில்வா வீதிதம்மிடவில் அமைந்துள்ள  கார்டினால் குரே நிலையத்தில் நடைபெறும். சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தனவின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் ஐக்கிய  தேசிய கட்சி உட்பட ஏனைய கட்சிகளின் தலைவர்களும்சமூகமத தலைவர்களும் உரையாற்ற உள்ளனர். நீர்கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களை இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி  ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் ஜெரோம் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளதாக முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment