நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கும்!- பிரதமர் செயலகம்

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
சர்வதேச அரங்குகளிலும், சர்வதேச நீதிமன்றங்களிலும் இதனை முன்னெடுக்கவுள்ளோம்.
அச்செயல்பாடுகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் நிபுனர் குழுவின் பரிந்துரையின் கூறப்பட்டதற்கிணங்க சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை அமைக்குமாறு செயலாளர் நாயகத்தை வலியுறுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 1 ½ மில்லியனுக்கு மேலான கையெத்துக்களை ஏற்கெனவே சேகரித்துள்ளது.
இக்கையெழுத்துக்களை உலகின் பல்வேறு பாகங்களிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகங்களின் கையளிக்கும்.
இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம். உலக அரங்கில் சிங்கள பேரினவாதத்திற்கு கிடைத்த முதலாவது தோல்வியாகும்.
இது இலங்கைக்கு கிடைத்த இறுதி தோல்வியும் அல்ல.
No comments:
Post a Comment