Translate

Monday 12 March 2012

இலங்கைக்கு எதிராக செயற்படும் உறுப்பு நாடுகளிடையே பிளவு?

இலங்கைக்கு எதிராக செயற்படும் உறுப்பு நாடுகளிடையே பிளவு?


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றும் ஜோசனைத்திட்டம் தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கிடை யில் பாரியளவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றும் விவ காரத்தில் உறுப்பு நாடுகளுக் கிடையில் நிலைவிவரும் முரண்பாடுகள் வெளிப் படையாக தென்படுகின்றது என சிரேஷ்ட மனிதவுரிமை செயற்பாட்டாளர் சுனிலா அபே சேகர தெரிவித்துள்ளார்.


உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண் டும் என வலியுறுத்தியே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரி மைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முனைப்புக்காட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் பாகிஸ்தான் உள்ளிட்ட அணிசேரா நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் இலங்கைக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளன. சீனா, ரஷ்யா, அல்ஜீரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இந்தியா, லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள் இன்னமும் உறு தியான நிலைப்பாடு எதனையும் வெளியிடவில்லை. இதேவேளை வலுவான ஒரு தீர்மானமொ ன்றை நிறைவேற்றினால் குற்றச்செயல்களு க்கு தண்டனை விதித்தல் தொடர்பில் இலங்கை கூடுதல் ஆர்வம் காட்டும் என ஐரோப்பிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

மனித உரிமை அமைப்புகள் தீர்மானம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக சுனிலா அபே சேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ஆம்திகதியள வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment