Translate

Wednesday 28 March 2012

மாவோயிஸ்ட் குழுவுடன் இணைந்து இலங்கைக் குழு செயற்படுகின்றது : கர்நாடக உள்துறை அமைச்சர் அசோக் _


  ஆந்திராவின் மேற்குப் பகுதிக் காடுகளில் செயற்பட்டு வரும் மாவோயிஸ்ட் குழுக்களுடன் இணைந்து சிறிய இலங்கைக் குழுவொன்றும் செயற்பட்டு வருவதாக கர்நாடகா உள்துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார். 


இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார். ஆந்திரப் பிரதேசத்தின் சிக்கமகூலர், உடுப்பி, ஷிமோகா மற்றும் தக்ஷின கன்னடம் ஆகிய பகுதிகளில் 25 30 மாவோயிஸ்ட்டுக்களுடன்இணைந்து இலங்கை குழுவொன்று செயற்பட்டு வருவதை நாம் அறிந்துள்ளதாக கர்நாடகா சட்ட சபையில் ஆர்.அசோக் கூறியுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அண்மையில் நக்சலைட்டுக்கள் கைப்பற்றிய மாவோயிஸ்டுக்களின் ஆயுதங்களை அடுத்து இலங்கை சந்தேக நபர்கள் குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்ததாக கர்நாடகா சட்ட சபையில் காங்கிரஸ் எம்.பி. அஷ்வத் நாராயணன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அசோக் தெரிவித்தார்.

இந்த அச்சுறுத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடகா உள்துறை அமைச்சர் அசோக் கூறியுள்ளார். __

No comments:

Post a Comment