Translate

Thursday 29 March 2012

தமிழ் கடைகளில் இலவச சாராயம் கேட்டு மிரட்டும் தாதா !


தமிழ் கடைகளில் இலவச சாராயம் கேட்டு மிரட்டும் தாதா !
லண்டன் புறநகர்ப் பகுதியான குரோய்டன் பகுதியில் உள்ள தமிழர் வியாபார நிலையங்களில், இலவச சாராயம் கேட்டு மிரட்டும் தாதாக்கள் அதிகரித்துள்ளனராம் ! இந்த காங் மாலை வேளைகளில் சென்று இலவச சாராயம் கேட்பது வழக்கம். கொடுக்கவில்லை என்றால் அங்கே அடிதடியில் ஈடுபடுவது, இல்லையேல் தகாத வார்த்தைகளில் திட்டுவது, இல்லாட்டிப் போனால் சாமான் சக்கட்டை உடைப்பது இவர்கள் குலத் தொழிலாகிவிட்டது. சிங்களவர்களிடம் இருந்து விடுதலை கிடைக்குமோ என்னவோ, ஆனால் இவர்களிடம் இருந்து முதலில் விடுதலை கிடைக்கவேண்டும் என மெட்ரோ பொலிடன் பொலிசாரிடம் தமிழ் கடைக்காரர்கள் முறையிடவேண்டி உள்ளதாம். 


மாலையில் கூட்டம் கூட்டமாக வரும் இந்த தாதாக்களுக்கு, இலவச சாராயத்தை கொடுத்தால் அவர்கள் பிரச்சனை இல்லாமல் சென்றுவிடுவார்கள் என்று மட்டும் நீங்கள் நினைக்கவேண்டாம். கொண்டுபோன தண்ணி காணாட்டியும்(பத்தாமல்போனாலும்) பிரச்சனை தான். திரும்ப வெறியோடு வந்து மேலும் ஒரு இலவச பாட்டில் கேட்பார்களாம். சமீபத்தில் குரோய்டனில் உள்ள பெஸ்ட்வே காஷ் அன் கரியில், நடந்த சம்பவம் இது. இலவச சாராயம் தரமுடியாது என்று மறுக்கப்பட்டதால், தமிழர் ஒருவர் போடும் ஆட்டம் இது. இங்கே அவர் பாவிக்கும் அநாகரீகமான வார்த்தைகளை நாம் கட் பண்ணி விட்டோம். அதனை காதுகொடுத்து கேட்க்க முடியவில்லை. ஆக மொத்தம் இலவச சாராயத்துக்குக்காக என்னவேண்டும் என்றாலும் இந்த தாதாக்கள் செய்வார்கள் போலும் !

வீடியோவைப் பாருங்கள் !


No comments:

Post a Comment