Translate

Thursday 19 April 2012

இலங்கை தமிழர்களின் பிரச்சினை முழு இந்தியாவின் பிரச்சினை!

இலங்கை தமிழர்களின் பிரச்சினை முழு இந்தியாவின் பிரச்சினை! 


இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் தமிழகத்தின் பிரச்சினை மாத்திரம் இன்றி,முழு இந்தியாவினுடையதுமான பிரச்சினை என இந்திய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. பாரதீய ஜனாதா கட்சியின் தேசிய பொது செயலாளர் பி.முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். 

தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழக கட்சிகள் மாத்திரம் முன்னிற்காமல் முழு இந்தியாவின் அரசியல் கட்சிகளும் முன்னின்று செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய எதிர்கட்சி என்ற வகையில்பாரதீய ஜனதா கட்சிஇலங்கை தமிழர்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்துக்கும்இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment