Translate

Monday 16 April 2012

யாழ்ப்பாணதில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்

தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பேணிக்கடைப்பிடிக்கும் கேந்திர ஸ்தானமாக யாழ்ப்பாணக் குடாநாடு விளங்குகின்றதென்ற பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலான அதிர்ச்சியான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இளம் சிறார்களை போற்றிப் பராமரிக்கும் சமூகத்ற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அருவருப்பானதும் திகிலானதும் வெட்கித் தலைகுனிய வைப்பதுமான . என்றுமில்லாத வகையில் சிறுவர் துஷ்பிரயோகம் மோசமாக அதிகரித்து வருகின்றது

வருடாந்தம் வடக்கில் சுமார் 600 சிறார்கள்
துஷ்பிரயோகங்களுக்குள்ளாகின்றனர்.  அதிலும் 10  ...12 வயதுக்குட்பட்ட
சிறுமிகள் .மூன்று வார காலத்திற்குள் மூன்று சிறுமிகள்
வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அதிலும் அவலம் என்னவெனில் இந்த சிறுமிகள்யாவருமே தாய் தந்தையரை இழந்த சிறுமிகள்.
அதேசமயம் யுத்த காலத்தின் போதோ இத்தகைய சமூகச்சீர் கேடான பாதகச்
செயல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
இதற்கான அடிப்படைக்காரணம் என்ன? சமூகத்தில் இந்த தார்மீக ஒழுக்க
நெறிப்பிறழ்வு ஏற்படுவதற்கு காரணம் என்ன?  மோசமான உளவியல் ரீதியான
பாதிப்புகளா?
சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்தும் அவர்களைப்
பாதுகாக்க வேண்டியது உடனடித்தேவை .

No comments:

Post a Comment