Translate

Monday 28 May 2012

சென்னை ரசிகர்களை ஏமாற்றிய திரிஷா:கடுப்பில் ரசிகர்கள்!


நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதின.

இந்த இறுதிப் போட்டியைக் காண பிரபல நட்சத்திரங்கள் பலர் மைதானத்திற்கு வந்திருந்தனர். நடிகை திரிஷாவும் மைதானத்திற்கு இப்போட்டியைக் காண வந்திருந்தார்.


அவர் நேராக கொல்கத்தா அணியை ஆதரிக்கும் பிரமுகர்கள் உட்காரும் இடத்தில் போய் அமர்ந்தார். ஆனால் அவர் சென்னை அணியின் ஆடையையோ அல்லது கொல்கத்தா அணியின் ஆடையையோ அணிந்திருக்கவில்லை.

வெள்ளை நிற டிரெஸ் உடுத்தி இருந்தார்.திரிஷாவை கொல்கத்தா ஆதரவாளர்கள் உரிமையில் பார்த்த ரசிகர்கள் அவர் மேல் ஆவேசமானார்கள்.

கை நீட்டி கோபமாக திட்டினார்கள். சென்னை அணி தோற்ற போதும் அவர் மீதான கோபம் இன்னும் அதிகமானது. இணைய தளங்களில் கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து திரிஷா கூறும்போது, என் ஆதரவு எப்போதுமே சென்னை அணிக்குத்தான். சபீனாகான் என் நெருங்கிய தோழி என்பதால் அவர் அருகில் போய் அமர்ந்தேன். இதனை ரசிகர்கள் சர்ச்சையாக்க வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment