Translate

Sunday 10 June 2012

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் முயற்சி : புலனாய்வுத்துறை


நாட்டில் குழப்ப நிலைமையை ஏற்படுத்த புலம்யெபர் தமிழர்கள் முயற்சித்து வருவதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவு தமிழர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, பிரி;ட்டன், இத்தாலி, நோர்வே, ஜெர்மனி, ஒஸ்ட்ரியா, அவுஸ்திரேலியா, சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளில் இவ்வாறு புலம்பெயர் தமிழர்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தி தொடர்ந்தும் குறித்த நாடுகளில் அகதிகளாக வாழ்வதே இந்தத் திட்டங்களின் அடிப்படை நோக்கம் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முன்மொழிவுகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment