Translate

Sunday 3 June 2012

திருடர்கள் போல புறப்படவேண்டி நிலையில் உள்ளர் மகிந்தர் !


மகிந்த ராஜபக்ஷ இன்று(ஞாயிறு) மாலை 8.05க்கு லண்டன் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் இருந்து புறப்பட்ட UL503 என்ற விமானம், கட்டார் சென்று அங்கிருந்து லண்டன் ஹீத்துரோ விமான நிலையம் வந்தடைய உள்ளது. டேர்மினல் 4 க்கு வரும் இவ்விமனத்தில் தான் மகிந்தர் பயணிப்பதாக அறிகிறது. இருப்பினும் இதனை உறுதிசெய்ய முடியவில்லை. இன்றைய தினம் 1 விமானம் மட்டுமே, இலங்கையில் இருந்து பிரித்தானியா நோக்கி வருகின்றது. இவ்விமானத்தை விட்டால், நாளை மதியமே மற்றொரு விமானம் இலங்கையில் இருந்து பிரித்தானியா வரவுள்ளது. நாளை மகிந்த ராஜபக்ஷ வந்தால், அவரால் பிரித்தானிய இராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள முடியாது !

எனவே அவர் நிச்சயம் இன்று வரும் இந்த விமானத்தில் தான் வந்தாகவேண்டும் என விடையம் அறிந்த வட்டாரங்கள், தெரிவித்துள்ளனர். பிரித்தானிய தமிழர்களைப் பொறுத்தவரை இது ஒரு பாரிய வெற்றியாகும் ! ஏன் எனில் ஒரு நாட்டின் ஜனாதிபதி, அதுவும் ஆசியக்கண்டத்தில் தான் புலிகளை வென்றேன் என மார்தட்டிக்கொள்ளும் மகிந்தர், பிரித்தானிய தமிழர்களுக்கு பயந்துபோய், தான் புறப்படும் நேரத்தையும் காலத்தையும் மறைக்கவேண்டி உள்ளதே ! இது உலகில் எங்கும் நடைபெறாத விடையம் ஒன்று ! தான் பிரித்தானியாவுக்குச் செல்வதை தனது சொந்த நாட்டு மக்களுக்குக் கூடச் சொல்லாமல், திருடர்கள் போல புறப்படவேண்டி நிலையில் உள்ளர் மகிந்தர் ! இதுவே பிரித்தானிய தமிழர்களின் வெற்றியாகும் !
இருப்பினும் இன்று மாலை 8.00 மணிக்கு லண்டன் ஹீத்துரோ (T4) விமான நிலையத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறியப்படுகிறது. லண்டன் வரும் மகிந்தர் வெளியே வரும்போது முதன் முதலாகக் காணவிருப்பது புலிக்கொடியைத் தான் ! லண்டனில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் திரண்டு ஹீத்துரோ விமான நிலையம் செல்லவேண்டும் என ஏற்பாட்டாளர்களும் இளையோர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர் !
மகிந்தர் வந்துகொண்டிருக்கும் விமானம், தற்போது எங்கே பறக்கிறது என்பதனை நேரடியாகக் காண இங்கே அழுத்துங்கள். நேரலையாக சமகாலத்தில் அவர் விமானம் எங்கே பறக்கிறது என்பதனை இங்கே பார்க்கலாம் !

No comments:

Post a Comment