Translate

Sunday 3 June 2012

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் இராணுவ மயமாக்கல் நடவடிக்கை


திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் இராணுவ மயமாக்கல் நடவடிக்கை நிறுத்தப்பட்டு அங்கு அதி உயர் பாதுகாப்பு வலயமும் சுருக்கப்படவேண்டும். வரலாற்றுப் பழைமை வாய்ந்த இந்துக் கோயில்கள் திருமலையில் இடித்து அழிக்கப்படுகின்றன. அதனையும் சிங்கள வெறி பிடித்த இனவாத அரசு நிறுத்த வேண்டும்.

ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களால் இடித்து அழிக்கப்பட்ட இந்த ஆலையம் பின்னர் திருத்து அமைக்கப்பட்டு இன்று சிங்கள ஆக்கிரமிப்பு வெறியர்களால் உடைக்கப்பட்டு உள்ளது 

திருகோணமலை மாவட்டம் இராணுவ மயமாக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. அங்குள்ள வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்து ஆலயங்கள் திட்டமிடப்பட்ட முறையில் இடித்து அழிக்கப்படுகின்றன. மூதூர் சங்குவேலிப் பகுதியில் உள்ள சிவன்கோவிலின் சிவலிங்கம் இடிக்கப்பட்டுள்ளது.

பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே இங்கு ஆட்சி நடைபெறுகின்றது. இங்கு மற்ற மதங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இச்செயற்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டபடியே மேற்கொள்ளப்படுகின்றன.

திருகோணமலையில் சிங்கள குடியேற்றத்தை நிறுவுவதற்காகவே இவ்வாறு வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்துக் கோயில்கள் இடித்து அழிக்கப்படுகின்றன.

இராணுவ மயமாக்கலை மேற்கொண்டே இந்த நாசகாரச் செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலில் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். அதி உயர் பாதுகாப்பு வலயமும் சுருக்கப்படல் வேண்டும்.

இந்த இராணுவ மயமாக்கலை மிக இலகுவாக முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் அரச அதிபர்களாகவும், மாகாண ஆளுநர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். இந்தப்போக்கு முதலில் நிறுத்தப்படவேண்டும்.

இராணுவ மயமாக்கல் மற்றும் சிங்கள மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி, இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எமது வரலாற்று சரித்திர சான்றுகள் அழிந்து மற்றும் அழிக்கப்பட்டு வருகின்றன. நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்றுதடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லைஇலங்கை முழுவதும் ஆட்சி செய்து ஆண்டுவந்த எமது இனத்தை இன்று வந்தேறிகளான விஜயனின் பரம்பரை என் கூறும் சிங்களவர்கள் தமிழர்களுக்குச் சொந்தமான மண்ணை அபகரித்தது மட்டும் அல்லாமல் தாம் சொல்வது உண்மையற்றவை என்று தெரிந்தும் எமது தாயாக மண்ணை இல்லாமல் சிங்களமயமாக்கும் வெறித்தனத்தில் எம் இனத்தை திட்டமிட்டு இனவழிப்பு செய்து வருகின்றன் பௌத்த சிங்கள தேரர்களின் துணையுடன் இலங்கையை ஆளும் இனவெறிபிடித்த மகிந்த ராயபக்ச . தனது இனத்தின் வரலாற்றை அறிந்து இருப்பது ஒவ்வொருவரின் கடமை என்னால் முடிந்த என் இதத்தின் நன்மைக்காக நான் இந்த முயச்சியை செய்து கொண்டு இருக்கின்றேன் மண்ணையும் இனத்தையும் மொழியையும் காப்பது தமிழர்களே உங்கள் கையில் உலகிலதமிழ் இனத்தின் தாயகமான மண்ணின் விடுதலையை பெற்றெடுக்க உழைப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை நீ உறங்கினால் வரலாற்றில் யார் உன்னை மன்னிப்பார் உறங்கினால் வரலாற்று பிழையை செய்து விடுவோம் எம் இனத்தின் வரலாறு உலக தமிழ் இனத்தின் வரலாறும் இருப்பும் வாழ்க்கையும் எமது தாய் நாட்டை மீட்டு எமது இனத்தின் பெருமையை உலகில் நிலைநாட்டுவோம் தமிழர்களின் தாகம் தமிழ் ஈழ தாயகம

No comments:

Post a Comment