Translate

Tuesday 5 June 2012

இந்துக் கோவிலை இடித்து புத்தர் சிலையமைக்கு சிறிலங்கா படையினர்


கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர், அங்கிருந்த இந்து ஆலயமொன்றை இடித்து அகற்றி புத்தர் சிலையை அமைத்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இப் பகுதியிலுள்ள 15 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 20 ஏக்கர் காணிக்குள் பலாத்காரமாக இச் செயற்பாட்டில் சிறிலங்காப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்காப் படையினரின் இந்த ஆக்கிரமிப்பினால் வீடுகளை இழந்துள்ள தமிழ் மக்கள் கடும் நெருக்கடி நிலையில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment