Translate

Friday 13 July 2012

கோத்தபாயவை பணி நீக்கம் செய்யவேண்டும் – மங்கள சமரவீர.



கோத்தபாயவை  பணி நீக்கம் செய்யவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.நாகரீகமான சமூகக் கட்டமைப்பிற்கு ஒவ்வாத காரியங்களை பாதுகாப்புச் செயலாளர் மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கோதபாய ராஜபக்ஷ போன்ற வினைத்திறனற்ற அரச ஊழியர்கள் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பது பயனற்றது என ஒரு மாத காலத்திற்கு முன்னர் தாம்எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளரின் வினைத்திறனற்ற தன்மைமீண்டும் புலனாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகங்கள் மூலம் சிங்கள காலாசார சீரழிவு ஏற்படுவதாக குற்றம் சுமத்தி வரும் தரப்பினர், பாதுகாப்புச் செயலாளர் ஊடகவியலாளர்களைஅச்சுறுத்தும் விதம் பற்றி ஏன் கண்டுகொள்வதில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பெட்ரிக்காஜேன்ஸை, அண்மையில் பாதுகாப்புச் செயலளார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அநாகரீகமாக மொழிப் பிரயோகத்தின் ஊடாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் நிறுவன ஒழுக்க விதிகள் மற்றும் சட்டங்களை மீறி அரச ஊழியர் ஒருவர் தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளமை தொடர்பில் ஆச்சரியப்படத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரை ஜனாதிபதி பதவி விலக்கவேண்டும் அல்லது பாதுகாப்புச் செயலாளரை பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை விடுக்க வேண்டியதுஅவசியமானது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment