Translate

Wednesday 28 November 2012

இந்தியாவின் உதவிகள் விசாரணை வேண்டும் வைகோ



இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கைக்கு இந்தியா செய்த உதவிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
வைகோவின் ‘ஈழத்தில் இனக்கொலை – இதயத்தில் ரத்தம்’ என்ற நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்ரும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழர்களின் நியாயமான கோரிக்கையான தனி அரசாங்கத்துடன் கூடிய தேசம் அமைக்க வேண்டும்.
இந்த பொது வாக்கெடுப்பை சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும். போரின் போது இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு வழங்கிய உதவிகள் தொடர்பாக இந்தியாவில் விசாரணை ஆணைக்குழுவொன்று அமைக்க வேண்டும்
குறிப்பாக 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு ரேடார் கருவிகள், இராணுவ உதவி உள்ளிட்டவற்றை இந்திய அரசு வழங்கியது. இது நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.
இதை இலங்கை அரசும் தெரிவித்திருக்கிறது. போருக்குப் பிறகு தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் பெருமளவில் குடியேற்றப்பட்டு வருகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment