Translate

Thursday 11 August 2011

தேர்தல் வழக்கில் சீமான் கைது!

ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சீமான் போட்டியிட்டார். அப்போது அவர் தேர்தல் அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இதனால் ஆண்டிப்பட்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி அவர் சென்னையில் கைது செய்யப்பட்டு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை கொண்டு செல்லப்படுகிறார்.

No comments:

Post a Comment