Translate

Saturday 8 October 2011

வாக்களிக்கச் சென்ற தமிழர்கள் தடுக்கப்பட்டனர்

மாத்தளை மாவட்டத்தில் வாக்களிக்கச் சென்ற தமிழ் வாக்காளர்களை ஒரு குழுவினர்தடுக்கும் நோக்கில் செயற்பட்டமை  தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என கபே அமைப்புத் தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மொஹான் வீரகோனின் வேட்பாளர் இலக்கம் பொருத்தப்பட்ட வாகனங்களே இவ்வாறு தமிழர்கள் வாக்களிப்புக்குச் சென்ற வீதிகளில் தடையை ஏற்படுத்தின என்றும் அது தெரிவித்துள்ளது.இதேபோன்று, மாத்தளை முஸ்லிம் பிரதேசமான அம்னா கல்லூரி, சாஹிரா கல்லூரி, தொல வீதி பூஜா நிலையம் போன்ற வாக்களிப்பு நிலையங்களுக்கு கடமைகளுக்குச் சென்ற ஐதேகவினர் இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தப்பட்டதால் அவர்கள் கடமைக்குச் செல்லவில்லை என்றும் கபே குறிப்பிட்டுள்ளது................ read more 

No comments:

Post a Comment