புதியதோர் ஆண்டில் எம்இனஎழுச்சியைப் புதிதாக்கிக் காட்டுவோம்.- யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.

விதை விருட்சமாவதும் மலர் கனியாவதும் கூட்டுப்புழு பட்டுப்பூச்சியாவதும் அதனதன் இலட்சியத்திற்கான விடாமுயற்சியும் கண்துஞ்சா உழைப்புமாகும்.தமிழீழ மக்களின் இலட்சியம் என்ன? அவர்கள் உழைப்பு எங்கே?
எமது தேசியத் தலைவரினதும் வேங்கைகளினதும் போராட்ட வளர்ச்சியை ஆசீர்வாதமாகக் கொண்டும் எமக்கு ஏற்பட்ட வேதனைகள் வலிகள் தோல்விகள் சுமைகளைப் படிப்பினையாகவும் படிக்கற்களாகவும் ஏற்றுக்கொண்டு எமது தமிழீழ இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்.எமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புதியஆண்டை வீணாக்காமல் விடுதலைக்காகச் செலவழிக்கச் சத்தியம் செய்வோம். அனைவர்க்கும் சுபீட்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
யேர்மன் திருமலைச்செல்வன்.
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.
No comments:
Post a Comment