Translate

Tuesday 21 February 2012

சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - தே.மு.தி.க.


ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தே.மு.தி.க கோரிக்கை விடுத்துள்ளது.


  தே.மு.தி.க வின் பொதுக்குழுக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் இன்று சென்னையில் இடம்பெற்றது. இக் கூட்த்திலேயே மேற்படி விடயம் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  தமிழ் மக்களை அழித்த மகிந்த ராஜபக்‌ஷ அரசிற்கு எதிராக சர்வதேசத்தினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும். என கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜெனீவாவில் சிறிலங்காவை ஆதரித்து தமிழினத்திற்கு துரோகம் இழைக்கக் கூடாது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
http://kathiravan.net/newsview.php?mid=35&id=986

No comments:

Post a Comment