திருவொற்றியூர் பெரியார் நகரில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சீமான் பேசியபோது,   ‘’தமிழ்நாட்டில் இத்தனை திராவிடக்கட்சிகள் இருந்தும் இலங்கையில் தமிழினம் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லையே, ஏன்? ஏனென்றால் பதவியை தக்க வைத்துக் கொள்ள காட்டிய அக்கறை இனத்தை காப்பதில் காட்ட மறுத்ததே காரணம்.


திராவிடக்கட்சிகள் ஆண்டதுபோதும், தமிழர்களாகிய நாம் மாண்டதும் போதும். உங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். எம் தமிழினத்தை விட்டுவிடுங்கள்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தேசிய கட்சிகள் என்று கூறிக்கொண்ட கட்சிகள் அனைத்திற்கும் சாவு மணி அடித்துவிட்டது. தேசிய கட்சிகளை மக்கள் இதற்கு மேலும் நம்பத்தயாராக இல்லை என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தேசிய கட்சிகள் அரசியல் முடிவுக்கு வந்தால்தான் நமது நாட்டில் உண்மையான கூட்டாட்சி மத்தியிலும், மாநில தன்னாட்சியும் மலரும். அதுவரை கூட்டாட்சியும் பிறக்காது. தன்னாட்சியும் மலராது’’என்று பேசினார்.