Translate

Monday 12 March 2012

இலங்கை புரிந்த போர்குற்றங்கள் தொடர்பாக உரிய ஆதாரங்கள் உள்ளன -அமெரிக்கா !


இலங்கை புரிந்த போர்குற்றங்கள் தொடர்பாக உரிய ஆதாரங்கள் உள்ளன -அமெரிக்கா !

இலங்கையில் இறுதி போரின் போது வாய் மொழி உத்தரவின் பிரகாரம் வெள்ளை கொடியுடன் சரண் அடைந்த  போராளிகள்  மற்றும் மக்களை இலங்கை அரசு
உலக விதிகளை மீறி  படுகொலை செய்துள்ளது .
அதற்கான ஆக்கபூர்வமான திடமான ஆதாரங்கள் அமெரிக்காவிடமும் மனித  உரிமை அமைப்பிடமும்  உள்ளது .
அங்கு நடந்த மனித பேரவலத்திற்கு உரிய தீர்வினை இலங்கை அரசுக்கு  வழங்க வேண்டும் .
அக்காலத்தில் அங்கு பணியாற்றிய அமெரிக்கா அதிகாரிகள் மனித உரிமை தொண்டுநிறுவன அதிகாரிகள்
நேரடி சாட்சிகளாகவும் அதேவேளை அவர்களிடம் பல சாட்சியங்களும் கிடைக்க பெற்றுள்ளன .
தற்போது நடந்து வரும் இந்த மனித உரிமை   பாதுகாப்புசபை  கூட்ட தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள
தீர்மானத்தை தடுக்க இயலாது என தொண்டுநிறுவன அதிகாரியும்  அமெரிக்காவின் முக்கிய இராய தந்திரி ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளனர்  !

No comments:

Post a Comment