தற்போது லண்டனில் உள்ள பிரசன்ன டீ சில்வா இலங்கைக்கு தப்பியோடும் நிலை தோன்றியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இன்று மாலை பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு சனல் 4 தொலைக்காட்சி இது தொடர்பான செய்தி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. தற்சமயம் இலங்கையின் சிறப்புத் தூதுவராக பிரித்தானியாவில் தங்கியுள்ள பிரசன்ன டி சில்வாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் பிரசன்ன டீ சில்வா இராணுவ அதிகாரியாகக் கடமையாற்றியவேளை அவர் இன அழிப்பில் ஈடுபட்டார் என்றும் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளைச் செய்தார் என்றும் அவர்மேல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஊர்ஜிதமற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், இதனை விசாரிக்க பிரித்தானியப் பொலிசார் ஒத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வழக்கை உலகத் தமிழர் பேரவை(GTF) தொடுத்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. பிரித்தானியாவில் முன்னணி வகிக்கும் ஒரு சட்ட நிறுவனமூடாகவே இந்த முறைப்பாடும் மற்றும் வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரசன்ன டீ சில்வா கைதுசெய்யப்படும் அபாயம் நிலவுகிறது. பொலிசார் இந்த முறைப்பாட்டை விசாரிக்க இருப்பதை, அவர்கள் இலங்கை தூதரகத்துக்கு உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும் தாம் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக சில்வா பிரித்தானியாவை விட்டு தப்பி ஓட உள்ளார் என்றசெய்திகளும் கசிந்துள்ளது.
No comments:
Post a Comment