Translate

Tuesday 8 May 2012

வேலை தருவதாகக் கூறி பெண்களை தவறான வழியில் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது: சீ.யோகேஸ்வரன்


வேலை தருவதாகக் கூறி பெண்களை தவறான வழியில் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது: சீ.யோகேஸ்வரன்
மட்டக்களப்பில் பெண்களை ஆடைத் தொழிற்சாலையில் வேலை தருவதாக கூறி, அழைத்து செல்பவர்கள் தவறான வழிகளுக்கு பயன்படுத்தும் செயற்பாடுகள் வேதனையளிப்பதாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி சமூக நலன்புரி அமைப்பு நடாத்திய, லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் மூலமாக ஆடைத் தொழிலகம் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

லண்டனில் இருந்த வருகை தந்த சகோதரர் கோபாலகிருஸ்ணன், தமது கற்பக விநாயகர் ஆலயத்தின் ஊடாக இப்பணியை புரிய வந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும். இன்று எமது மக்களின் நலன்கருதி லண்டனில் இருந்து கோபாலகிருஸ்ணன் நேரடியாக வருகை தந்து பல சேவைகைளை எமது மண்ணில் நடாத்துகின்றார்.
  • அகிலன் பெண் பிள்ளைகள் பராமரிப்பகம், 
  • கற்பகா பப்பட தொழிற்சாலை, 
  • அகிலன் கணனி பயிற்சி நிலையம், 
  • ஆடைத் தொழிலகம் போன்றவையும், 
  • பல்கலைக் கழக மாணவர்களுக்கான நிதி கொடுப்பனவையும் எங்களது சமூக நலன்புரி அமைப்பு ஊடாக நடாத்துகின்றார்.





ஆரையம்பதி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடைபெற்ற இவ்விழாவில், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் எற்பட்ட கொடிய யுத்தம், சுனாமி போன்றவற்றால் தமது வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப முடியாத நிலையிலும் சவுதி போன்ற கீழைத்தேய நாடுகளில் வீட்டுப் பணிப் பெண்ணாகவும், எமது மாவட்டம் தவிர்ந்த வேறு மாவட்டங்களுக்கு ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கும் செல்கின்றனர்.

அங்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டு, கடுமையான வேலைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுமட்டுமின்றி ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை தருவதாக சிலர் வறிய பிரதேசங்களில் இருந்து சிலரை அழைத்துச் சென்று எங்களது மகளீரை தவறான வழிகளுக்கு பயன்படுத்தும் சில செயற்பாடுகளும் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.
இச்செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. இவ்விடயமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையில் உள்ளோம். இந்த வகையில் இங்கு ஒரு ஆடைத் தொழிலகம் ஆரம்பிக்கப்படுவதை இட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
லண்டனில் இருந்த வருகை தந்த சகோதரர் கோபாலகிருஸ்ணன், தமது கற்பக விநாயகர் ஆலயத்தின் ஊடாக இப்பணியை புரிய வந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும். இன்று எமது மக்களின் நலன்கருதி லண்டனில் இருந்து கோபாலகிருஸ்ணன் நேரடியாக வருகை தந்து பல சேவைகைளை எமது மண்ணில் நடாத்துகின்றார்.
அகிலன் பெண் பிள்ளைகள் பராமரிப்பகம், கற்பகா பப்பட தொழிற்சாலை, அகிலன் கணனி பயிற்சி நிலையம், தற்போது ஆடைத் தொழிலகம் போன்றவையும், பல்கலைக் கழக மாணவர்களுக்கான நிதி கொடுப்பனவையும் எங்களது சமூக நலன்புரி அமைப்பு ஊடாக நடாத்துகின்றார்.
எமது மண்ணில் வடமாகாண மக்களை பிழையாக எடுத்துக்காட்டி பிரதேச வாதம் கூறி, சிலர் அரசியல் இலாபம் தேடும் இவ்வேளை, வடமாகாணத்தை சேர்ந்த எம் உறவுகளின் உதவி எம் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்து கொண்டிருக்கின்றது.
இன்று கோபாலகிருஸ்ணன் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்திலும், தமது பணியை முன்னெடுத்து செல்கின்றார். உண்மையிலே எமது மக்கள் எங்கு துன்பப்படுகின்றார்களோ அங்கெல்லாம் அவரின் பணி செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

http://news.lankasri.com/show-RUmqyFTbOVkqz.html

No comments:

Post a Comment