சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தும் 'டெசோ' கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பான டெசோவுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இதன் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
அதில், கருணாநிதி, திமுக மூத்த தலைவர்களான அன்பழகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு தீவிர தமிழ் ஈழ ஆதரவாளரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைக்கப்படவில்லை.
இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது அதைத் தடுக்க அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி முழு அளவில் முயற்சி எடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அப்போது திமுக கூட்டணியிலிருந்த திருமாவளவன் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
இந்நிலையில் டெசோ அமைப்பின் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு, டெசோ கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று திருமா பதிலளித்துள்ளார்.
எதிர்காலத்தில் அழைப்பு விடுக்கப்பட்டால், கட்சி நிர்வாகிகளோடு பேசி முடிவு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பான டெசோவுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இதன் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
அதில், கருணாநிதி, திமுக மூத்த தலைவர்களான அன்பழகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு தீவிர தமிழ் ஈழ ஆதரவாளரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைக்கப்படவில்லை.
இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது அதைத் தடுக்க அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி முழு அளவில் முயற்சி எடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அப்போது திமுக கூட்டணியிலிருந்த திருமாவளவன் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
இந்நிலையில் டெசோ அமைப்பின் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு, டெசோ கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று திருமா பதிலளித்துள்ளார்.
எதிர்காலத்தில் அழைப்பு விடுக்கப்பட்டால், கட்சி நிர்வாகிகளோடு பேசி முடிவு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment