Translate

Wednesday 16 May 2012

தன்னை இலங்கை அதிகாரிகள் ஐ.நாவில் வைத்து கிண்டல்செய்தனர் என்றார் ஜொலண்டா


தன்னை இலங்கை அதிகாரிகள் ஐ.நாவில் வைத்து கிண்டல்செய்தனர் என்றார் ஜொலண்டா 
ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மாநாட்டில் கலந்துகொண்ட தன்னை இலங்கை அதிகாரிகள் கிண்டல் செய்தனர் என்று ஜொலண்டா போஸ்டர் தெரிவித்துள்ளார். ஜொலண்டா போஸ்டர் அவர்கள் சர்வதேச மன்னிப்புச் சபையில் அங்கம் வகிக்கும் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் ஆவார். இவர் இலங்கை தொடர்பாக பல கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புரொன் லைன் கஃபே எனப்படும், முன்னணி ஊடகவியலாளர் அமைப்பு, இலங்கை தொடர்பான கருத்தரங்கு ஒன்றை நேற்றைய தினம் நடத்தியிருந்தது.
இதனை பி.பி.சி காட் டோக் என்னும் நிகழ்ச்சியை நடத்தும் ஸ்டீபன் ஸக்கர் நெறிப்படுத்தினார். இன அழிப்புக்கான தமிழர் அமைப்பில் இருந்து ஜனனி கலந்துகொண்டார்.

மகிந்தரின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜீவ விஜயரட்ன, கொலைக்களங்களின் தயாரிப்பாளர் காலம் மக்ரே, சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரி ஜொலண்டா மற்றும் இலங்கை அரசியல் வாதி என்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் அருன் தம்பிமுத்துவும் கலந்துகொண்டார். இதில் பேசிய ஜொலண்டா, தம்மை இலங்கை அரசின் அதிகாரிகள் ஜெனீவாவில் வைத்து கேலிசெய்ததாகத் தெரிவித்தார். 78 பேர் அடங்கிய இலங்கை அரசின் குழு, தம்மையும் தமது அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்களையும் அணுகி, இலங்கை அரசின் நிலை தொடர்பாக விளக்க முற்பட்டதாகவும், அதனை ஏற்க்க மறுத்த தம்மை, அவர்கள் கேலி செய்ததாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment