Translate

Tuesday 15 May 2012

விடுதலை செய்யப்பட்ட போராளிகளில் மூவர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது!


புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள்போராளிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக மக்கள்கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளரும் ஜனநாயக மக்கள்முன்னணி தலைவருமான மனோ கணேசன்தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் இன்று (14.05.2012)வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த செப்ரம்பர் மாதம் 30 ஆம் திகதி புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகள்ஆயிரத்து 800 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் சவரிமுத்து லோரண்டின் மோரினோரொக்சி மற்றும் முருகேசு முருகானந்தன் ஆகியோர் இதுவரை தமது பெற்றோரிடம்ஒன்று சேரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மூவரின் பெற்றோர்கள் இது தொடர்பாக தம்மிடம் முறைப்பாடுசெய்துள்ளதாகவும் மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளரும் ஜனநாயக மக்கள்முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மூவரும் ஏன் பெற்றோர்களுடன் சேர்க்கப்படவில்லைஅவர்கள்இன்னமும் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்போன்ற விபரங்களைவெளியிடுமாறு
மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளரும் ஜனநாயக மக்கள் முன்னணிதலைவருமான மனோ கணேசன் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்புஅமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் கோரிக்கை விடு

No comments:

Post a Comment