Translate

Tuesday 15 May 2012

சிவன் கோவிலில் சிவலிங்கத்தை அகற்றி புதையல் தோண்டிய நபர்கள்


  பொலன்னறுவையில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க சிவன் கோவிலில் இனந்தெரியாத சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது. 
இந்தச் சிவாலயத்தின் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்தை அவ்விடத்திலிருந்து அகற்றியே புதையல் தோண்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


சிவலிங்கம் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் மூன்றரை அடி ஆழமாக குழி தோண்டப்பட்டுள்ளதாகவும் இந்தப் புதையல் தோண்டும் முயற்சி எப்போது மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாதுள்ளதாகவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment