Translate

Sunday 10 June 2012

இரா.சம்பந்தனின் கருத்துக்கு எதிராக வழக்கு தொடருவதாக ஹெல உறுமய தெரிவிப்பு _


  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் ஈழத்தை ஸ்தாபிக்கப்போவதாக தெரிவித்த கருத்தை எதிர்த்து ஹெல உறுமய வழக்கு தொடர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 


நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சம்பந்தன் அரசியலமைப்பின் 157 ஆவது சரத்துக்கு முரணாக தனி நாடு குறித்த கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு எதிராகவே ஹெல உறுமய வழக்கு தொடரவுள்ளது.

இரா.சம்பந்தன் இது போன்ற கருத்துக்களைத் தெரிவிப்பது குறித்தும் அரசாங்கம் எதுவித நடவடிக்கை எடுக்காதது குறித்தும் ஹெல உறுமய அதிருப்தியடைந்துள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். _

No comments:

Post a Comment