Translate

Saturday 4 August 2012

உங்கள் கண்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்..!


உங்கள் கண்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்..!



அதிகமாக வேலை செய்த பின் ,கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோவலி ஏற்பட்டாலோ,கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டுகண்ணுக்குஓய்வு கொடுக்க வேண்டும். கண் கூசும் வெளிச்சத்திலும்மங்கலான வெளிச்சத்திலும்பொருட்களை உற்று நோக்கக் கூடாது. 


கண்ணில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆனால்அந்தக் கண்ணுக்குநாம் ஏதாவது நல்லது செய்கிறோமாஇல்லை. பார்வையில் ஏதாவது சிக்கல் ஏற்படும் போது மட்டும் தான்கண்ணைப் பற்றி நாம் அக்கறை கொள்கிறோம். கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்கசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம். 


அதற்கு சில ஆலோசனைகள்: 
காலையில்சூரிய உதயத்துக்கு முன்,எழுந்து கொள்ளுங்கள். வாய் நிறைய தண்ணீரை நிரப்பிகண்களை இறுக்கி மூடிக் கொள்ளுங்கள். 15 நிமிடத்திற்குகைகளால் தண்ணீரை,கண்களில் அடித்துக் கொள்ளுங்கள். தண்ணீர்சூடாகவும் இருக்கக் கூடாதுகுளிர்ச்சியாகவும் இருக்கக் கூடாது. 

வெயிலில் அதிக நேரம் நின்றிருந்த பிறகுஉடனே கண்களைக் கழுவக் கூடாது. நீங்கள் நிற்கும் இடத்தின் வெப்ப நிலைக்கேற்பஉடல் ஆசுவாசப்பட்ட பிறகேகண்ணையும்,முகத்தையும்தண்ணீரால் கழுவலாம். 

தூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும் பொருட்டு,அதிக நேரம் அதை உற்றுப் பார்க்காதீர்கள். கண்களுக்குத் தேவை யான அளவுகண் சிமிட்டுவது அவசியம். 

கண் கூசும் வெளிச்சத்திலும்மங்கலான வெளிச்சத்திலும்பொருட்களை உற்று நோக்கக் கூடாது. 

அதிகமாக வேலை செய்த பின்கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோவலி ஏற்பட்டாலோ,கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டுகண்ணுக்குஓய்வு கொடுக்க வேண்டும். 

இரவு அதிக நேரம் கண் விழித்திருத்தல்சூரிய உதயத்துக்குப் பின்னும் தூங்கிக் கிடத்தல் ஆகியவை,கண்ணுக்கு ஊறு விளைவிக்கும். 

தூசிபுகைஅதிக சூரிய வெளிச்சம்அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாப்பது அவசியம். 

கண்ணை மேல்கீழ்பக்கவாட்டுகளில்நாளொன்றுக்கு 10 முறை அசைத்துபயிற்சி செய்தால்கண் தெளிவாக இருக்கும். 10 முறைகண்ணைச் சுழற்றவும் வேண்டும்.

கண்ணுக்கு அதிகம் வேலை கொடுக்கும் சமயங்களில்ஒவ்வொரு மணி நேரத்திற்கும்,இடையில்ஐந்து நிமிடம்உள்ளங்கையால்இரு கண்ணையும் மூடியபடி அமர்ந்து,கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். 

ஒரு ஸ்பூன் திரிபலா சூர்ணத்தில்ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிஇரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். காலையில்தண்ணீரை வடிகட்டி எடுத்துஅந்தத் தண்ணீர் மூலம் கண்ணைக் கழுவினால்கண் பிரகாசமாக இருக்கும். 

குடல் சுத்தமாக இருந்தால்கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்புமன உளைச்சல்சோகம்கோபம்கவலை ஆகி யவைகண்ணையும் பதம் பார்க்கக் கூடியவை. எனவேஇவற்றைத் தவிர்க்க வேண்டும். 

கேரட்முட்டைகோஸ் ஆகியவற்றைஉணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால்கண் பார்வைதெளிவாக இருக்கும். 


கண்ணுக்கு மையழகு! 
பன்னீரில்விளக்கெண்ணெயை கலந்துபஞ்சில் தோய்த்துகண் மீது வைத்து, 15 நிமிடம் ஊற வேண்டும். கண் எரிச்சல் மறையும். 

வடிகட்டிய டீ தண்ணீரில்பஞ்சைத் தோய்த்து கண்ணில் வைத்தாலும்கண்ணுக்கு குளிர்ச்சி ஏற்படும். 

கரிசலாங்கண்ணிக் கீரையில் தயாரித்த மைகண்ணுக்குஅழகும்குளிர்ச்சியும் சேர்க்கும்.

கண்ணை மூடியபடிவெள்ளரிச் சாறால்கண்ணைக் கழுவலாம்பஞ்சில் தோய்த்தும், 10நிமிடம் கண் மீது வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். 

தக்காளிச் சதைமஞ்சள் பொடிஎலுமிச்சை சாறுகடலை மாவு ஆகியவற்றை,பசை போல கலந்துகண்ணைச் சுற்றியுள்ள கரு வளையத்தின் மீது பரப்பிஇரண்டு மணி நேரம் ஊறலாம். தூங்கும் நேரத்தில் செய்தால்உங்களுக்கு வசதி. வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வரகரு வளையம் மறையும். 

கண் பாதிப்புகளை தெரிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் யாவை? : 

No comments:

Post a Comment