Translate

Tuesday 21 February 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது.


சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது.

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அமெரிக்க அரசினால் முடக்கப்பட்டமையை கண்டித்து அந்நாட்களில் அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரிக்கு எழுதிய கடிதம் ஒன்றிலேயே மனோ இதை சுட்டிக் காட்டி இருந்தார்.

முரண்பாடு தோற்றம் பெற்றதன் அடிப்படையை கண்டறிய அமெரிக்கா தவறி விட்டது, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முடக்கப்பட்ட நடவடிக்கையானது புலிகளுக்கு எதிரானதே ஒழிய தமிழருக்கு எதிரானது அல்ல என்று தூதுவர் பிளேக் கூறுகின்றார், நல்லது, விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது சிங்கள பௌத்த அடிப்படைவாதம், எனவே சிங்கள பௌத்த அடிப்படைவாதம் மீது நடவடிக்கை எடுங்கள் என்று மனோவின் கடிதத்தில் மேலும் உள்ளது.

தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் கிடைத்து உள்ளன.

No comments:

Post a Comment